search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹவுத்தி போராளிகள்"

    சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் வினியோகம் சீர்குலைந்தது.
    ரியாத்:

    சவுதி அரேபியாவின் பகை நாடான ஈரான் ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகளை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. இந்த போராளிகள் ஏமன் நாட்டின் எல்லை வழியாக சவுதி அரேபியாவின் மீது அடிக்கடி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    பெட்ரோலிய வளத்தை மட்டுமே நம்பியிருக்கும் சவுதி அரேபியா அரசு நாடு முழுவதும் பல பெட்ரோலிய கிணறுகளை அமைத்து உற்பத்தி மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

    நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தலைநகர் ரியாத் நகரில் இருந்து மேற்கில் உள்ள யான்பு நகருக்கு குழாய்கள் மூலமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் அனுப்ப சுமார் 1200 கிலோமீட்டர் நீளமுள்ள பைப்லைன் வழித்தடம் உருவாக்கப்பட்டு, பெட்ரோல் வினியோகத்தை அரசு செய்து வருகிறது. இந்த குழாய்களில் கச்சா எண்ணெய் வேகமாக பாய்ந்து செல்வதற்காக வழியில் சில இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ரியாத் நகரின் அருகே உள்ள அஃபிஃப் மற்றும் டவாட்மி பம்பிங் ஸ்டேஷன்கள் வழியாக செல்லும் பைப்லைன் குழாய்களின் மீது இன்று அதிகாலை ஹவுத்தி போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.



    இதனால், குழாய்களின் பெரும்பகுதி சேதம் அடைந்ததால் சில மணி நேரத்துக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டது.
    ஏமன் உள்நாட்டு போரால் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் 3 ஆண்டுகளில் மட்டும் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. #hungermalnutrition #Yemencivilwar #childrendeath

    சனா:

    அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. ஏமன் நாட்டு அரசுக்கு எதிராக ஹுதி என்ற புரட்சி அமைப்பினர் போராடி வருகிறார்கள்.

    இவர்களுக்கு பல அரசியல் தலைவர்களும் பக்கபலமாக உள்ளனர். தலைநகரம் சனா உள்ளிட்ட பல பகுதிகளை ஹுதி அமைப்பினர் கைப்பற்றி வைத்துள்ளனர்.

    பெரும்பாலான பகுதி அரசிடம் உள்ளது. இது தவிர மேலும் 2 பகுதிகளை 2 அமைப்புகள் கைப்பற்றி வைத்துள்ளன. அவற்றை கைப்பற்றுவதற்கு அரசு படைகள் போராடி வருகிறது.

    நாட்டில் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொருவர் கையில் இருப்பதால் அங்கு அரசு அமைப்பே செயல்படவில்லை. மக்களுக்கு தேவையான எந்த பொருட்களும் சப்ளை இல்லை.

    இதன் காரணமாக மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள். சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பசி - பஞ்சத்தில் சிக்கி இருப்பதாக ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது.

    இது குழந்தைகளை மிகவும் பாதித்திருக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் 3 ஆண்டுகளில் மட்டும் 85 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

    5 வயதுக்கு உட்டப்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவர்களை காப்பாற்ற உணவோ மற்றும் மருந்து பொருட்களோ கிடைக்க வில்லை. இதன் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

    ஏமன் நாட்டு போரில் இதுவரை 50 அயிரம் பேர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #hungermalnutrition #Yemencivilwar #childrendeath

    ஏமன் நாட்டின் ஹொடெய்டா மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஹவுத்திப் போராளிகளுக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த ஆவேசப் போரில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். #Yemen #Hodeida #Clashes
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.


    இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த பத்து நாட்களாக சண்டை வலுத்து வருகிறது.

    இந்நிலையில், நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் 150-க்கும் அதிகமானவர்கள் இருதரப்பிலும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

    ஹொடெய்டாவின் மேற்கு கடலோரப் பகுதிக்குள் அரசு ஆதரவாளர்கள் படையை தடையின்றி நுழையவிட்ட ஹவுத்தி படையினர், திடீரென்று நாற்பரங்களிலும் சூழ்ந்து கொண்டு நடத்திய இந்த தாக்குதலில் அரசு ஆதரவுப்படை வீரர்கள் அதிகமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.   #Yemen #Hodeida #Clashes 
    ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் பத்துக்கும் அதிகமான சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Cargoshipsdetained
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.


    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான இந்த முயற்சி கடந்த மாதம் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், கோதுமை மாவு, சர்க்கரை என சுமார் 5700 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த சரக்கு கப்பல்கள் மற்றும் சுமார் 20 ஆயிரம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்த டேங்கர் கப்பல்களை ஹவுத்தி போராளிகள் சிறைபிடித்து வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Cargoshipsdetained #oiltankersdetained #Houthimilitia #Hodeidahport
    ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஏமன் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் 84 பேர் உயிரிழந்தனர். #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    சனா:

    ஏமன் நாட்டில் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

    அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில், செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 24 மணிநேரமாக நடத்திய தாக்குதல்களில் 73 ஹவுத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்களும் உயிரிழந்தனர்

    பல போராளிகளும் 17 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர் என ஏமன் நாட்டு ஊடகங்கள் இன்றிரவு செய்தி வெளியிட்டுள்ளன. #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
    ஜெனிவா நகரில் நடைபெற்ற ஏமன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் மறுத்து விட்டதால் ஐ.நா.சபையின் இந்த முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது. #YemenPeaceTalks #HouthiPeaceTalks
    ஜெனிவா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

    இந்நிலையில், ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

    சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் ஏமன் வெளியுறவுத்துறை மந்திரி காலேத் அல்-யாமனி பங்கேற்றார்.

    போர் கைதிகளாக பிடிபட்டுள்ள ஹவுத்தி போராளிகளை விடுதலை செய்வது, மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை அனுமதிப்பது. குறிப்பாக, டாயிஸ் நகரில் அரசு படைகளால் சுற்றிவளைத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள ஹவுத்தி போராளிகளை விடுவிப்பது, சனா நகரில் உள்ள விமான நிலையத்தை மீண்டும் திறப்பது ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஏமன் அரசு அதிகாரிகளிடம் கிரிஃபித்ஸ் வலியுறுத்தினார். 

    இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

    பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஜெனிவாவுவுக்கு வரும் எங்கள் விமானத்தை சவுதி தலைமையிலான பன்னாட்டு படைகள் வழிமறித்து சோதனையிட கூடாது. 

    உள்நாட்டு போரில் படுகாயமடைந்த எங்களது இயக்கத்தை சேர்ந்தவர்களை அந்த விமானத்தில் மேல்சிகிச்சைக்காக ஓமன் நாட்டுக்கு அழைத்து செல்வதை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி தற்போதைய நிலவரப்படி தோல்வியில் முடிந்துள்ளது.

    எனினும், ஏமன் தலைநகர் சனா அல்லது ஓமன் நாட்டு தலைநகரான மஸ்கட் நகரில் ஹவுத்தி தலைவர்களை விரைவில் சந்தித்துப் பேச முயற்சி செய்து வருவதாக ஐ.நா. சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #YemenPeaceTalks  #HouthiPeaceTalks
    கப்பல்களை வழிமறித்து போராளிகள் தாக்குவதால் நிறுத்தி வைக்கப்பட்ட கச்சா எண்ணைய் ஏற்றுமதியை செங்கடல் வழியாக சவுதி அரேபியா மீண்டும் தொடங்கியுள்ளது. #Saudioilexportsresumes #Saudioilexports #RedSealane
    ரியாத்:

    ஏமன் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் ஹவுத்தி போராளிகள் அரசுப் படைகளுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசுப் படைகளுடன் கைகோர்த்துள்ள நேசநாடான சவுதி அரேபியா இந்த போராளிகளை ஒடுக்க தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதனால், சவுதி அரேபியாவை ஹவுத்தி போராளிகள் தங்களது பரம எதிரியாக கருதுகின்றனர்.

    ஏமன் நாட்டை மையமாக கொண்டு சவுதி அரேபியாவின் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவரும் ஹவுத்தி போராளிகள் குழுவுக்கு சவுதி அரேபியாவின் பகை நாடான ஈரான் மறைமுகமாக பணம் மற்றும் அதிநவீன ஆயுதங்களை அளித்து வருகிறது.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிசென்ற இரு பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது மீது ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25-ம் தேதி தாக்குதல் நடத்தி அழித்தனர். இதையடுத்து எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. 

    அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் சவுதி எண்ணைய் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களை இருவார காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஹவுத்தி போராளிகள் கடந்த 31-ம் தேதி அறிவித்திருந்தனர்.

    கச்சா எண்ணைய் ஏற்றுமதியை மட்டுமே பிரதான வருமான நம்பி இருக்கும் சவுதி அரேபியா தற்போது செங்கடல் பகுதியில் உள்ள பாப் அல்-மன்டேப் ஜலசந்தி வழியாக இன்றிலிருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணைய் ஏற்றுமதியை தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரி காலித் அல்-ஃபலிஹ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudioilexportsresumes #Saudioilexports #RedSealane
    ×